திங்கள், 29 மார்ச், 2021

வெக்கை - வாசிப்பனுபவம்

 


 வெக்கை வாங்க

வாழ்க்கையில் இரண்டே வகையான உறவுகள்தான்.. ஓன்று, என்ன நடந்தாலும் உடன் நிற்பவை, மற்றது, சிறிய பிரச்சனையையே காரணம் காட்டி விலகுபவை. என்னுடைய கடுகுபோன்ற சிறிய வாழ்க்கையில் இரண்டையுமே நான் பார்த்திருக்கிறேன். அதே நேரத்தில் மனிதர்களும் இரண்டு வகையே.. என்ன நடந்தாலும் ஏற்றுக்கொண்டு மேலே செல்பவர்கள், எதிர்கொண்டு போராடுபவர்கள். இவ்விரண்டு வகையினரையும் அனைவரும் எதிர்கொண்டிருப்போம்.

இந்த இரண்டு வரிகளை மட்டுமே வைத்துக்கொண்டு பிரமாதமான கதையை எழுதமுடியுமா? இந்த கேள்விக்கான பதில்தான் பூமணி அவர்களின் "வெக்கை" என்னும் நாவல்.

நிலத்திற்காக அண்ணனை கொன்ற வடக்கூரானின் கையை வெட்டப்போய் அவனை கொன்றுவிடுகிறான் செலம்பரம் (சிதம்பரம்). பிறகு மொத்த குடும்பமும் ஓட த்தொடங்குகிறது. செலம்பரமும் அவன் அப்பா பரமசெவம் (பரமசிவம்) ஒரு புறமும், அவனுடைய தங்கையும் தாயும் வேறுபுறமும் வடக்கூரனின் ஆட்களிடமிருந்து தப்பி ஒளிந்து ஓடுகிறன்றனர். இந்த ஓட்டமும் ஒளிதலுமே கதை.

ஒரு பழிவாங்கும் கதையாக இருந்தாலும் முழுவதுமாக பாசத்தால், அன்பினால் கதையை கொண்டுசென்றிருக்கிறார். ஒரு தந்தை தன மகன் மீது வைக்கும் பாசத்தை இதைவிட நுணுக்கமாக கூறுவது கடினம். அம்மா, அப்பா, மாமா, தங்கை, பங்காளிகள் மற்றும் உறவுகள் இவர்களை காப்பாற்ற எடுக்கும் அபாயமான துணிச்சல் ஒன்றே உறவுகளின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கிறது. உறவுகளென்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

புத்தகம் படித்தபிறகும் அசுரன் திரைப்படத்தை பலநாட்கள் பார்க்கவில்லை. ஏனென்றால் பலசமயங்களில் திரைப்படத்தை எடுக்கும்போது கதையில் உள்ள உயிரோட்டம் தவறிவிடும். இங்கு திரைப்படத்தை கதையின் உயிரோட்டத்துடன் எடுத்த இயக்குனர் வெற்றிமாறனை பாராட்டியே ஆகவேண்டும். பலர் இதில் தவறவிட்ட ஒரு முக்கியமான விஷயம், இந்த திரைப்படம் வெக்கை நாவலை மட்டும் மையமாக வைத்து நகரவில்லை, கீழ்வெண்மணியில் நடந்த கொடூரத்தையும் இந்த தலைமுறைக்கு சொல்லியிருக்கிறது.

கதையில் இருந்த பாசம் திரைப்படத்தில் பழிவாங்கலாக தெரிவது எழுத்துக்கும் நிகழ்கலைக்குமான வேறுபாடேயன்றி வேறில்லை.

புலிநகக் கொன்றை - வாசிப்பனுபவம்

சிறுவயதில் பி ஆர் சோப்ரா-வின் மஹாபாரதத்தின் தொடக்கத்தில் "நான் காலம் பேசுகிறேன்" என என்றொரு வரி வரும்.. காலம் நம் எல்லாரையும் பார்...